விளையாட்டு

கிரிக்கெட் ரசிகர்களுக்கு லசித் மாலிங்க விடுத்த கோரிக்கை!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் திமுத் கருணாரத்ன தீர்மானித்துள்ள நிலையில், குறித்த போட்டியை பார்வையிடுவதற்கு சகல கிரிக்கெட் இரசிகர்களும் செல்ல வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் நாளை முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி திமுத் கருணாரத்னவின் 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும்.

இந்தநிலையில் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் திமுத் கருணாரத்ன டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தமது சமூக வலைத்தள பக்கங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள லசித் மாலிங்க, திமுத் கருணாரத்னவிற்காக நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்குச் சகல விளையாட்டு இரசிகர்களும் ஒன்று கூட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இறுதி போட்டியில் திமுத் கருணாரத்ன சதத்தைப் பெறுவார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ