அழகு சாதனப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் இலங்கை
தரம் மற்றும் இணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுர்வேத மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் தொடர்பான விதிமுறைகளை வலுப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இராஜகிரியவில் உள்ள தேசிய ஆயுர்வேத வைத்தியசாலையில் ஆயுர்வேத முறைமைக் குழுவிற்கான புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், கடுமையான கண்காணிப்பு தேவை என தெரிவித்தார்.
ஆயுர்வேத அழகு சாதனப் பொருட்களுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்கள் மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகள் பற்றிய கவலைகள் குறித்தும் அமைச்சர் பேசினார்.
“தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நேரம் எடுக்கும். ஆனால் ஆயுர்வேதத்தின் பல்வேறு இணைப்புகளைக் கூறி பல அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே இந்த தயாரிப்புகளை ஒழுங்குபடுத்துவது பரந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஒரு முக்கிய படியாக இருக்கும்” என்று ஜயதிஸ்ஸ கூறினார்.