ஆசியா

நியாயமற்ற வணிக நடைமுறைகளுக்காக கூகல் நிறுவனத்திற்கு 16.7 மில்லியன் அபராதம் விதித்துள்ள இந்தோனீசியா

நியாயமற்ற தொழில் நடைமுறைகளுக்காக கூகல் நிறுவனத்திற்கு இந்தோனீசியா மோசடித் தடுப்பு முகவை $16.7 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.

இந்தோனீசியாவைச் சேர்ந்த செயலி மேம்பாட்டாளர்கள் ‘கூகல் பிளே பில்லிங்’ முறையைப் பயன்படுத்த வேண்டியிருந்த நிலையில், மற்ற கட்டண முறைகளைக் காட்டிலும் கூகல் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகச் சந்தேகப்பட்டு, இந்தோனீசியா கடந்த 2022ஆம் ஆண்டு விசாரணையைத் தொடங்கியது.

இல்லாவிடில், கூகல் பிளே ஸ்டோர் செயலியகத்திலிருந்து தங்களின் செயலி நீக்கப்படும் நிலையை அவர்கள் எதிர்நோக்கியதாகவும் கூறப்பட்டது.இதனால், பயனர்களின் எண்ணிக்கை குறைந்து, செயலி மேம்பாட்டாளர்களின் வருமானம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முற்றுரிமைக்கு எதிரான இந்தோனீசியச் சட்டத்தை கூகல் மீறியது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

கூகல் பிளே பில்லிங் முறையின்கீழ் கூகல் நிறுவனம் 30% வரை கட்டணம் வசூலித்ததாக விசாரணைக் குழு தெரிவித்தது.

மொத்தம் 280 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இந்தோனீசியாவில் கூகல் 93% சந்தையைத் தன்வசம் வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அபராதத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக புதன்கிழமையன்று (ஜனவரி 22) கூகல் பேச்சாளர் கூறினார்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!