செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் காட்டுத்தீ தொடர்ந்து வேகமாக பரவும் அபாயம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் பரவி வரும் காட்டுத்தீ மேலும் பரவும் அபாயம் உள்ளது.

தீயை பெருமளவில் தூண்டிய சாண்டா அனா காற்று வரும் நாட்களில் மீண்டும் வலுப்பெறக்கூடும் என்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

அதன்படி, மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால், தீ மீண்டும் தீவிரமடையக்கூடும் என்று அமெரிக்க வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள், தீ தற்போது 14,117 ஏக்கர் பரப்பளவில் எரிந்து வருவதாகக் கூறியுள்ளனர்.

அதன்படி, காட்டுத்தீ பரவியுள்ள பகுதிகளில் 33 சதவீத பகுதிகள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா முழுவதும் ஒரு வாரத்திற்கும் மேலாகப் பரவி வரும் காட்டுத்தீயின் விளைவாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி