ஐரோப்பா

ஸ்பெயினில் 500 அடி பள்ளத்தில் விழுந்து பெண் ஒருவர் பலி!

தெற்கு ஸ்பெயினில் உள்ள மலகா அருகே பிரபலமான மலையேற்ற பகுதியில் பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.

20 வயது மதிக்கத்தக்க பெண் சுமார் 500 அடி  பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலையில் நடந்த இந்த சம்பவம் பிரபலமான காமினிடோ டெல் ரே பாதைக்கு அருகில் உள்ள எல் சோரோ கிராமத்திற்கு அருகில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டப்பின் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 36 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்