வட அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ : ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க திட்டமிடும் அதிகாரிகள்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்கள் முன்னேற்றம் காண்பார்கள் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதற்கிடையில் நேற்று (09.01) பிற்பகல் லாஸ் ஏஞ்சல்ஸின் வெஸ்ட் ஹில்ஸ் சுற்றுப்புறத்திற்கு அருகில் ஒரு புதிய தீ தொடங்கியது, இதனால் மேலும் வெளியேற்றங்கள் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியைச் சேர்ந்த ஷெரிப் ராபர்ட் லூனாவின் கூற்றுப்படி, வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவுகள் “அதிகமாக பாதிக்கப்பட்ட” பகுதிகளை மட்டுமே பாதிக்கும் என்று லூனா கூறினார், அதிகாரிகள் முதன்மையாக கட்டாய வெளியேற்ற மண்டலங்களையே கவனித்து வருவதாகவும் கூறினார்.

ஈடன் பகுதியில் 4000 மேற்பட்ட கட்டடங்கள் அழிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 59 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்