விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வா? ரோகித் சர்மா வெளியிட்ட அறிவிப்பு

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடரில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்த 3 போட்டிகளில் 2 தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.

அத்துடன் 2025ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ண இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துள்ளது எனலாம்.

இதனால் கடும் விமர்சனங்களைச் சந்தித்த ரோகித் சர்மா, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

இதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரின் பாதியிலேயே விலகிய அணித்தலைவராக ரோகித் சர்மா இடம்பெற்றுள்ளார்.

இதையடுத்து அவுஸ்திரேலிய தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், ஓய்வு பெற உள்ளதாக வெளியான செய்திகளுக்கு ரோகித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளையின் போது கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா,

தற்போது நடைபெறும் ஒரு போட்டியிலிருந்து மட்டுமே விலகியுள்ளேன். எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.
நான் எங்கும் செல்லவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!