இந்தியா

பாலியல் வன்கொடுமை; கேரளாவில் துணைப்பாட வகுப்பு ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் மனோஜ் என்பவர் தன் வீட்டுக்குத் துணைப்பாட வகுப்புக்கு வந்த மாணவியை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதை கைப்பேசியில் காணொளி எடுத்து மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் சொல்வதை அந்த மாணவி கேட்கவில்லை என்ற காரணத்தால் அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் தனது நெருங்கிய நண்பர் வட்டாரத்தில் பரப்பினார்.

இதையறிந்த அந்த மாணவியின் பெற்றோர், அந்தத் துணைப்பாட ஆசிரியர் மனோஜ் மீது காவல்துறையில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் காவல்துறை மனோஜைக் கைது செய்தது. மேலும், அவருடைய கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கைப்பேசியில் சிறுமியை வன்கொடுமை செய்த புகைப்படங்கள், காணொளிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்தச் சம்பவம் 2019, ஜூன் 2ஆம் திகதி மனோஜின் வீட்டில் நடந்தது. அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்துவந்த மனோஜ், தனியாக துணைப்பாட வகுப்புகளை நடத்தி வந்தார். அப்போது, சிறப்பு வகுப்பு நடத்துவதாகக் கூறி அந்த மாணவியை மட்டும் தனியாக வரவழைத்துள்ளார். துணைப்பாட வகுப்பிற்கு வந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவனந்தபுரத்தின் சிறப்பு விரைவு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதி ரேகா குற்றவாளி மனோஜுக்கு நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஒரு தீர்ப்பை அளித்துள்ளார்.

மனோஜ் மீது பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு சட்டப் பிரிவுக்கும் 3 மாதங்கள் முதல் 30 ஆண்டுகள் வரைச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மனோஜ், மொத்தம் 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும், அபராதமாக 1.05 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். நீதிபதியின் இந்தத் தீர்ப்புக்கு அதிகமானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

(Visited 32 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!