நேபாள பிரதமரை சந்தித்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில்
நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இன்று காலை காத்மாண்டுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்திற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மரியாதைக்குரிய விஜயம் இதுவாகும்.





