ஆசியா

ஜப்பானில் கடுமையாகும் சட்டம் – சரியாக வீசாதவர்களுக்கு நடவடிக்கை

ஜப்பான் குப்பைகளை அகற்றும் கடும் விதிமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும் நிலையில் சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் புக்குஷிமா நகரில் அந்த விதிமுறைகள் இன்னும் கடுமையாகவிருக்கின்றன. ஜப்பானில் குப்பைகளின் அளவு, எரிக்கக்கூடிய, எரிக்க முடியாதவை, மறுபயனீடு செய்யக்கூடியவை எனப் பிரிக்கப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஒவ்வொரு குப்பைப் பையும் சோதனை செய்யப்படும் என்று புக்குஷிமா நகர அரசாங்கம் அறிவித்துள்ளது.

விதிமுறைகளைப் பின்பற்றாதோர் அடையாளம் காணப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

தனிநபரோ, நிறுவனமோ… யாராக இருந்தாலும் அவர்களின் அடையாளம் பொதுமக்களிடம் தெரிவிக்கப்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறின.

குப்பைகள் நிர்வகிக்கப்படுவதை மேம்படுத்த ஜப்பான் நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகப் புதிய அறிவிப்பு வந்துள்ளது. புக்குஷிமாவில் கடந்த ஆண்டு குப்பைகள் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதாக 9,000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!