சர்வதேச விமானத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு
கொழும்பிருந்து மெல்பேர்ன் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றில் குழப்பகரமாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
41 வயதான குறித்த இலங்கையர், நேற்றைய தினம் (18) விமானத்தில் பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொள்ள முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (19) ப்ரோட்மீடொவ்ஸ் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவரது வழக்கு மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 7 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 11 times, 1 visits today)





