இலங்கை

இலங்கை: 3 நாட்களுக்கு 5 பதில் அமைச்சர்கள் நியமிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவர் இல்லாத நேரத்தில் முக்கிய அமைச்சுக்களை மேற்பார்வையிட ஐந்து பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள், வெளியுறவு அமைச்சகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் மற்றும் தொழிலாளர் அமைச்சகம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

அதன்படி , டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரத்தின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றவுள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூர்யப்பெரும இந்த அமைச்சுக்கான பதில் அமைச்சராக செயற்படுவார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக செயற்படுவார்.

தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பதில் தொழிலாளர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!