உக்ரைன் குழந்தைகளை நாடுகடத்த பயன்படுத்தப்படும் புட்டினின் விமானம்!
விளாடிமிர் புடினின் ஜனாதிபதி விமானம் உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யாவிற்கு நாடு கடத்துவதில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆதரவு ஆராய்ச்சி குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையால் நிதியளிக்கப்படும் யேல்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அறிக்கை, ரஷ்ய ஜனாதிபதி விமானம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளை அழைத்துச் சென்று, அவர்களின் முந்தைய அடையாளங்களை அகற்றி, ரஷ்ய குடும்பங்களுடன் தங்கவைக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
2022 மே மற்றும் அக்டோபர் மாதங்களில் ஜனாதிபதியின் சொத்து மேலாண்மைத் துறையால் நிர்வகிக்கப்படும் விமானம் மூலம் குறைந்தது இரண்டு குழுக்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2023 இல் புடினுக்கு எதிராககைது வாரண்ட் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.