செய்தி விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நிலவரம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025ம் ஆண்டு நடைபெறவுள்ளது.

இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இருமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.

புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. நியூசிலாந்து அணிக்கு இனி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இல்லாததால் அந்த அணி இடம் பெறவில்லை. அதனால் இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் 4 (ஆஸ்திரேலியா) போட்டிகள் மீதமுள்ளது. இதில் 2 வெற்றி பெற வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு இன்னும் 3 (1 இலங்கை 2 பாகிஸ்தான்) போட்டிகள் உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்கு 6(4 இந்தியா 2 இலங்கை) போட்டிகளில் 4 போட்டிகளிலும் இலங்கைக்கு ( 1 தென் ஆப்பிரிக்கா 2 ஆஸ்திரேலியா) 3 போட்டிகளில் மூன்றுமே வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

(Visited 52 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி