செய்தி விளையாட்டு

ஆட்ட நிர்ணய சதி – தென்னாபிரிக்க முன்னாள் வீரர்கள் மூவர் கைது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் (மேட்ச் பிக்சிங்) செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சவால் தொடரில் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் முதல் தரவரிசை ஆட்டக்காரராகவும் சிறந்த ஒருநாள் போட்டி பந்து வீச்சாளராகவும் இருந்தவர்.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு இடையில் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் செய்வதில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட ஏழு வீரர்களில் இந்த மூவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content