இலங்கை

இலங்கையில் 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஒன்பது (09) மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகளை புதுப்பித்துள்ளது.

இதன்படி NBRO) பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இந்தப் பகுதிகளில் பதிவாகியுள்ளதால், மண்சரிவு, பாறை சரிவு மற்றும் நிலம் சரிவு போன்ற அபாயங்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

NBRO பதுளை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இப்பகுதிகளில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்