இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் அதிகரித்துள்ளது.
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 211,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுணானது 195,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணானது 209,000 ரூபாவாக, 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 193,000 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,662.43அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
(Visited 23 times, 1 visits today)