இலங்கை: விலையுயர்ந்த அம்பருடன் இருவர் கைது! பொலிஸார் தீவிர விசாரணை
அனுராதபுரத்தில் சுமார் 8 மில்லியன் பெறுமதியான திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட பெறுமதியான அம்பர்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த இருவரை நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் ஒரு கிலோகிராம் அம்பர்கிரிஸ் கண்டுபிடிக்கப்பட்டது,
இது திமிங்கலங்களிலிருந்து பெறப்பட்ட மிகவும் அரிதான மற்றும் விலையுயர்ந்த பொருளாகும்.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நொச்சியாகம பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரும், கொக்காவெவ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவருமே கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)





