இலங்கை செய்தி

வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

சைபர் தாக்குதலுக்கு உள்ளான வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் தற்போது மீட்கப்பட்டு வருவதாக கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் இணையத்தளம் கடந்த முதலாம் திகதி சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு உத்தியோகத்தர் சாருக தமுனுபொல,

“நவம்பர் முதலாம் திகதி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக குறித்த திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்த சைபர் தாக்குதலால் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தில் மாற்றம் ஏற்பட்டது.

அது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, இணையதளத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்கள் வேறு வெளி தரப்பினருக்கு சென்றிருக்கிறதா இல்லையா என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, வெளி தரப்பினரால் எவ்விதமான தகவல்கள் பெறப்பட்டதாகவோ அல்லது திருடப்பட்டதாகவோ வௌியாகியுள்ளது.

(Visited 21 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை