இந்தியா

23 கோடி ரூபாய் வரையில் ஏலம் போன எருமை : இந்தியாவில் இடம்பெற்ற சுவாரஸ்ய சம்பவம்!

ராஜஸ்தானின் புஷ்கர் விழாவின் போது அங்குள்ள சந்தையில் கால்நடைகளை மக்கள் ஏலம்விடுவது வழக்கம். இதன்படி இங்குள்ள எருமை மாடு ஒன்று 23 கோடி ரூபாய் வரையில் ஏலம் விடப்பட்டுள்ளது.

ஆறு அடி அங்குலம், 13 அடி நீளம், 1500 கிலோ எடை என இந்த எருமை பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

முரா இனத்தை சேர்ந்த இந்த எருமையின் உரிமையாளர்   ஜக்தர் சிங் குறித்த மாட்டிற்கு அன்மோலு என பெயரிட்டுள்ளார். இதற்காக அவர் ஒருநாளைக்கு 2000 ரூபாய் வரையில் செலவழிப்பதாக தெரிவித்துள்ளார்.

முந்திரிப் பருப்பு, பாதாம், வாழைப்பழம், சோயா, சோளம் என போஷாக்கான உணவே எருமைக்கு உணவாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய அன்மோலை புஷ்கர் சந்தைக்கு கூட்டி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதன்போது மக்கள் இந்த எருமைக்கு 23 கோடி ரூபாய் வரை  பேரம் பேசியிருக்கிறார்கள். ஆனால், ஜக்தர் சிங், அன்மோலை தன்னுடைய மகனாக பாவித்து வருவதால், அதை விற்பதற்கு மனமில்லை என அறிவித்துவிட்டாராம்.

(Visited 20 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே