இந்தியா

தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஒடிசா அரசு

ஒடிசா மாநில அரசு, கல்விமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.

மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி இவ்வாறு முடிவெடுத்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “உயர்கல்வி முறையை மிகவும் தரமானதாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின்படி, வழக்கமான மூன்றாண்டுப் பட்டப் படிப்புகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்புகள் தொடங்கப்படும். இதில் சேரும் மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டையும் நிறைவுசெய்த பிறகு, பட்டயம், பட்டம், கௌரவ பட்டம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்களைப் பெறலாம் என்று அறிக்கை கூறியது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாநில அரசு கூடுதல் தகுதிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்றும் இதன்கீழ் மாணவர்கள் திறன் மேம்பாடு, உள்ளகப் பயிற்சி, சமூக சேவை போன்றவற்றை மேற்கொள்வர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மாணவர்களே தங்கள் பாடங்களைத் தேர்வுசெய்யவும் ‘இடைநிற்றல், மீண்டும் சேருதல்’ விருப்பத்தைப் பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குள் பட்டப் படிப்பை முடிக்கவும் இந்தத் திட்டம் உதவும்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

(Visited 48 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!