இலங்கை செய்தி

கொழும்பு – யாழ். தொடருந்து சேவை மீள ஆரம்பம்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்குக்கான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி 28.10.2024 திகதி முதல் இரண்டு தொடருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி தொடருந்தும், பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிய ரஜரட்ட ரஜின தொடருந்தும் சனிக்கிழமை முதல் வடக்கு பாதையில் பயணிக்கவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்காக கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான தொடருந்து சேவை கடந்த மாதம் 19 மற்றும் 21 இரு திகதிகளில் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

எனினும் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டகுறித்த சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
See also  இலங்கை: இரு இளைஞர்களை தாக்கிய மூன்று பொலிசார் பணி இடைநிறுத்தம்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content