இலங்கை

இலங்கை தொடர்பில் வெளிநாடுகள் கொடுத்த எச்சரிக்கையை திரும்பப் பெறும் – விஜித ஹேரத்!

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்  விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பயண ஆலோசனைகளை வெளிநாடுகள் வாபஸ் பெற்றுக்கொள்ளும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அறுகம்பே பகுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா நேற்று (23) பயண ஆலோசனையை வழங்கியது, பின்னர் பிரித்தானியா, ரஷ்யா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் தங்களது சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டன.

இது தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார்.

“அடுத்த சில நாட்களில் இந்த நிலை முழுமையாக சீரடையும். அப்போது பல வெளிநாடுகள் கொடுத்த எச்சரிக்கை நோட்டீஸ்களை நீக்கிவிடலாம். நாங்கள் எடுத்த நடவடிக்கைகளில் அவர்கள் ஏற்கனவே திருப்தி அடைந்துள்ளனர். எனவே, அவர்கள் தங்கள் தரப்பில் நம்பிக்கையை பெற்றுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 3 times, 3 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content