இலங்கை செய்தி

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை நீக்க முடியாது

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்க அரசாங்கம் தயாராக இல்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி குறித்த அதிகாரிகள் இருவரையும் இலக்கு வைத்து, அவர்களை தற்போதைய பதவிகளில் இருந்து நீக்குவதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் தேவையாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், கடந்த காலங்களில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இரு அதிகாரிகளும் மிகவும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தியதாக தெரிவித்தார்.

இரண்டு அதிகாரிகளின் பக்கச்சார்பற்ற தன்மையை ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூட நன்கு அறிவார்கள் எனவும், பல்வேறு தேவைகள் உள்ள நபர்களுக்கு அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!