இந்தியா

கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்: நாடு தழுவிய ரீதியில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் மருத்துவர்களுக்கு நீதி வேண்டும் என கோரியும், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து உரிய நீதி வேண்டி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

See also  டெல்லியில் 2,000 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல்

மருத்துவர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், செப். 16ம் திகதி மருத்துவக் குழுவுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனினும் அதில் மருத்துவர்கள் கோரிக்கை முழுமையாக ஏற்கப்படவில்லை. இதனால் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இன்றுடன் 11வது நாளாக இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்து வருகிறது.

நீதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இன்று நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.) அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று காலை 6 மணிக்கு இந்த போராட்டத்தை மருத்துவர்கள் தொடங்கினர். சுமார் 12 மணி நேரம் தொடரும் இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சண்டிகாரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரனீத் ரெட்டி கூறுகையில், “கொல்கத்தாவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக 12 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நாங்கள் கடைபிடிக்கிறோம். அரசு பதிலளிக்க வேண்டிய நேரம் இது. மருத்துவ மாணவர்களின் குரலை உயர்த்த நாங்கள் இங்கு வந்துள்ளோம். மருத்துவமனைகளில் அவசர சேவையானது முழு பலத்துடன் இயங்குகிறது. இந்த போராட்டத்தால் மருத்துவ சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படாது” என்றார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content