பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்து அதிரடி காட்டிய சாச்சனா….

எதிர்பாராததை எதிர்பாரங்கள் என கமலஹாசன் ஏழு சீசன்களாக சொல்லிக் கொண்டிருந்தார். அதை எட்டாவது சீசன் தொடங்கிய ஒரே வாரத்திற்குள் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது ஏற்கனவே மக்களுக்கு அதிருப்தி இருப்பதையும், திடீரென தொகுப்பாளர் மாறியதையும் தெரிந்து கொண்ட சேனல் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

போட்டியாளர்கள் உள்ளே நுழைந்து 24 மணி நேரத்திலேயே முதல் எவிக்ஷன். அதுவும் போட்டியாளர்களிலேயே ரொம்பவும் இளம் வயதில் இருக்கும் சாச்சனாவை வெளியே அனுப்பினார்கள்.

அது மட்டும் இல்லாமல் இந்த எலிமினேஷனில் விஜய் சேதுபதிக்கு பங்கு இருப்பதாக சொல்லி அவருக்கு எதிராக முதல் நாளிலேயே ஒரு கூட்டம் கிளம்பியது.

என்னதான் 24 மணி நேரத்தில் சாச்சனா வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும் இந்த வாரம் முழுக்க அவரைப் பற்றிய பேச்சு தான்.

சாச்சனா மீண்டும் வீட்டிற்குள் வந்துவிடுவார் என அரசல் புறசலாக நேற்றிலிருந்து செய்திகள் உலாவிக் கொண்டிருந்தது. ஒரு சிலரின் கணிப்பு படியே இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார் சாச்சனா.

See also  பிக்பாஸ் செல்லும் முன் கவர்ச்சி ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா...

வந்ததோடு நான் வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன், இங்கே ரஞ்சித், சத்யா மற்றும் விஷால் ரொம்பவும் குறைவான கண்டன்டு கொடுக்கிறீர்கள் என சொல்கிறார்.

சாச்சனாவை மீண்டும் வீட்டுக்குள் பார்த்ததும் போட்டியாளர்கள் கதி கலங்கி போய் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் ஆட்டத்தை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்திருக்கிறார் என்பதால் கொஞ்சம் பதறித்தான் போயிருக்கிறார்கள்.

சாச்சனா இவ்வளவு நாள் வீட்டிற்குள் இருந்திருந்தால் கூட ஏதோ ஒரு காரணத்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய் இருப்பார். ஆனால் முதல் நாளிலேயே அவரை வீட்டை விட்டு அனுப்பி, இந்த வாரம் முழுக்க அவரைப் பற்றி பேச வைத்து விட்டார்கள்.

சாச்சனாவுக்கு நடந்தது அநியாயம் என பொங்கிய கூட்டம் எல்லாம் இப்போது மொத்தமாக அவருக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்து விடும். அது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களின் கவனமும் இனி அவர் பக்கம் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

(Visited 3 times, 3 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content