மத்திய கிழக்கு

காஸா சந்தித்த பேரழிவை லெபனானும் எதிர்நோக்கலாம் – பிரதமர் நெதன்யாகு மிரட்டல்

காஸா சந்தித்தப் பேரழிவை லெபனானும் சந்திக்கக்கூடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்திவரும் நிலையில் நெட்டன்யாகு செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 8) மிரட்டல் விடுத்தார். லெபனானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

லெபனானின் கடற்கரைப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் கூடுதல் படைகளை நிறுத்தியுள்ளது, அவற்றில் வசிக்கும் மக்களை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

“நீண்டகாலமாகத் தொடரும் போரால் காஸா பேரழிவையும் வேதனையையும் எதிர்நோக்குகிறது. அந்த நிலை லெபனானுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது,” என்று திரு நெட்டன்யாகு லெபனான் மக்களிடம் காணொளிவழி நேரடியாகக் கூறினார்.“லெபனான் மக்களிடம் நான் கூறுவது, இந்தப் போரை நிறுத்த ஹிஸ்புல்லாவிடமிருந்து உங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள்,” என்றும் அவர் எடுத்துரைத்தார்.

Benjamin Netanyahu threatens Lebanon with destruction 'like Gaza' - NZ  Herald

இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைஃபா மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக ஹிஸ்புல்லா முன்னதாகத் தெரிவித்தது. 85 ஏவுகணைகள் லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பாய்ச்சப்பட்டன என்று இஸ்ரேலிய ராணுவமும் குறிப்பிட்டிருந்தது.லெபனானில் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்ந்தால் இஸ்ரேலிய நகரங்கள் மேலும் தாக்குதல்களுக்கு உள்ளாகும் என்று ஹிஸ்புல்லா எச்சரித்திருந்தது.

See also  லெபனானை விட்டு வெளியேற விரும்பும் குடிமக்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் திகதியன்று ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது எதிர்பாரா விதமாகத் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல், காஸா மீது பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஹிஸ்புல்லாவுடனும் இஸ்ரேல் சண்டையில் ஈடுபட்டது.

ஹமாஸ் தாக்குதலுக்கு சுமார் ஓராண்டுக்குப் பிறகு இஸ்ரேல், லெபனானில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்புடன் போரிடும் அதேவேளையில், வடக்கே லெபனானுடனான தனது எல்லைப் பகுதியைத் தங்கள்வசம் கொண்டுவரப்போவதாகவும் இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content