இலங்கை செய்தி

பட்டம் விட்ட சிறுவர்களுக்கு ஏற்பட்ட கதி

சிறுவர்கள் பறக்கவிட்ட பட்டம் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி இரண்டு மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

பண்டாரகம பமுனு முல்ல அலவத்த ஹேன மற்றும் அட்டுலுகம குருந்துவத்தையைச் சேர்ந்த 13 வயதுடைய இரு சிறுவர்களே  காயமடைந்துள்ளனர்.

அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம அட்டுலுகம குருந்துவத்த என்ற குழந்தை வசிக்கும் மூன்று மாடி வீட்டின் மேல் பகுதியில் இருந்து படுகாயமடைந்த இருவரும் பட்டத்தை பறக்கவிட்டுள்ளனர்.

இதன்போது வீட்டின் அருகே இருந்த உயர் மின்கம்பியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

அலுமினியக் குழாயின் உதவியுடன் அதனை எடுக்க முற்பட்ட போது, ​மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 2 times, 2 visits today)
See also  ஜப்பான் விமான நிலைய ஓடுபாதையில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content