இலங்கை செய்தி

ஒன்லைன் நிதி மோசடி – வெளிநாட்டவர்கள் பலர் கைது

இணையத்தில் திட்டமிட்டு பணம் மோசடி செய்த வெளிநாட்டவர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா ஹன்வெல்ல வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல அவிசாவளை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றை சுற்றிவளைத்தபோதே இந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குழு சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 29 சீன ஆண்கள், ஒரு சீனப் பெண், ஒரு இந்திய ஆண் மற்றும் மூன்று பெண்கள், இரண்டு தாய்லாந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உள்ளனர்.

அவர்களிடம் இருந்து 499 கையடக்கத் தொலைபேசிகள், 24 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்க்டாப்கள் மற்றும் நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்டவை விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், முதலீட்டு மோசடி, போன்றவற்றின் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

See also  இலங்கை ஜனாதிபதியை சந்திப்பது ஒரு கௌரவம்! இந்திய வெளிவிவகார அமைச்சர்

மேலும், இந்த சந்தேக நபர்கள் சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த டெபாசிட்தாரர்களையும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச பொலிஸ் மற்றும் யூரோபோல் ஆகியோரின் ஆதரவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 3 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content