இலங்கை : ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!
இலங்கையில் இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதி மீண்டும் ஜனவரி முதல் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான நிதியை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 15 times, 15 visits today)