செய்தி

இந்திய – இலங்கை இணைப்பு திட்டங்கள் தொடர்பில் அநுர அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டம் உட்பட அனைத்து இந்திய இலங்கை இணைப்பு திட்டங்கள் குறித்து மீள ஆராய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது

நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பொது தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்தின் கீழ் வடக்கில் அதானி குழுமத்தின் மின்சக்தி திட்டம் உட்பட இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் அனைத்து திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் அமைந்ததும் இந்தியாவுடனான திட்டங்கள் குறித்து அரசாங்கம் இறுதிமுடிவை எடுக்கும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுடனான இணைப்பு திட்டங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன அந்த திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த மதிப்பீடுகளிற்காக இந்த மறு ஆய்வு இடம்பெறுகின்றது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுத்தேர்தலின் பின்னரே அவற்றை தொடர்ந்து எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து தீர்மானிப்போம் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த திட்டங்களை முன்னெடுப்பதா அல்லது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வதா? அல்லது நாங்கள் முன்வைக்கும் விடயங்களுடன் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா என்பதை தீர்மானிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பொதுத்தேர்தலிற்கு முன்னர் எந்த தீர்மானத்தையும் எடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 24 times, 24 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content