பொழுதுபோக்கு

“புஷ்பா” டைரக்டர்க்கு எல்லாமே தெரியும்… குண்டை தூக்கி போட்ட ஜானி மாஸ்டர்

தன்னுடைய வித்யாசமான நடன அசைவுகள் மூலம் மக்கள் கவனத்தை பெற்றவர் ஜானி மாஸ்டர். இவரின் நடனத்தை பாராட்டி இந்திய அரசு அவருக்கு தேசிய விருதையும் வழங்கியது.

இந்த நிலையில் தான் பெண் ஒருவர் அளித்த புகார் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

மாஸ்டர் தன்னிடம் அத்துமீறியதாக 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்தப் புகாரை ஏற்ற ஹைதராபாத் போலீசார், தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை கைது செய்தனர்.

இதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு, அடிப்படை ஆதரமற்றது எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தெலுங்கில் வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றில், இந்த விவகாரம் குறித்து ஜானி மாஸ்டர் தெரிவித்த கருத்துகள் வெளியானது. அதில், “என்னால் பாதிக்கப்பட்டதாக பெண் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவருடைய திறமையை அடையாளம் கண்டு எனக்கு உதவி நடன இயக்குநராக சேர்த்துக்கொண்டேன். ஆனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண் என்னை மனரீதியாக டார்ச்சர் செய்தார். பலமுறை மிரட்டலும் விடுத்தார்.”

“புஷ்பா படத்தின் படப்பிடிப்பின் போது, அந்தப் பெண் என்னை மிகவும் டார்ச்சர் செய்தார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். இதனால் , மனதளவில் வேதனையடைந்த நான், புஷ்பா பட இயக்குநர் சுகுமாறிடம் கூறினேன். இந்த விஷயத்தில் அவரும் எனக்கு உதவி செய்தார். அந்தப் பெண்ணிடம் சுகுமாரும் பல அறிவுரைகளை வழங்கினார். ஆனால், அந்தப் பெண் அவற்றை எல்லாம் ஏற்பதாகவே தெரியவில்லை. தன் முடிவில் உறுதியாகவே இருந்தார். அதற்கு நான் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால் தான் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இனி புஷ்பா பட இயக்குனரிடமும், விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content