மத்திய கிழக்கு

லெபனானில் ஒரே சமயத்தில் வெடித்த பேஜர் கருவிகள் – 8 பேர் பலி

லெபனான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கையடக்க பேஜர்கள் வெடித்ததில், போராளிக் குழுவைச் சேர்ந்த ஹெஸ்புல்லா மற்றும் ஒரு சிறுமி உட்பட குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர்

மற்றும் ஈரானிய தூதர், அரசாங்கம் மற்றும் ஹெஸ்பொல்லா அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காசா போர் தொடங்கிய பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஸ்புல்லா அமைப்பினரை செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அவர்கள் பயன்படுத்தி வந்த பேஜர் கருவிகள் ஒரே நேரததில் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஜர் கருவிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் அதிகமாக சூடேறியதால் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், இது இஸ்ரேலின் சைபர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லெபனானின் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட், குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 2,750 பேர் காயமடைந்ததாகவும் கூறினார் – அவர்களில் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!