பொழுதுபோக்கு

“மகாராஜா”வின் “மாகாராணி”யாக நயன்தாரா… புரியலையா?

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மகாராஜா’ வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்றது.

ரஜினிகாந்த், விஜய் என பல முன்னணி நடிகர்கள் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து வாழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நித்திலன் சாமிநாதனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நயன்தாரா நடிப்பில் “மகாராணி” என்ற படத்தை இயக்கவுள்ளார் நித்திலன்.

“மகாராஜா” படத்தின் ரிலீசுக்கு முன்பே நயன்தாரா நடிக்கவுள்ள படத்தை இயக்க நித்திலன் ஒப்பந்தமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் “மகாராஜா” படத்தை தயாரித்த ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் நயன்தாரா நடிக்கவுள்ள “மகாராணி” படத்தையும் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பலரும் “மகாராணி” என்று படத்தின் டைட்டில் வைக்க “மகாராஜா” படத்தின் வெற்றிதான் காரணமா என்றும் கேட்டு வருகின்றனர். நயன்தாராவின் “மகாராணி” படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!