இலங்கை செய்தி

சஜித்திற்கு ஆதரவாக நடத்திய மாவனெல்ல கூட்டத்தில் குழப்பம்

மாவனெல்லயில் இன்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் பேசிக்கொண்டிருக்கும்போது, தங்களை 30 வருடங்களாக ஏமாற்றிவருவதாக கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து கோபமடைந்த கபீர் ஹசீம் அவரை மேடைக்கு வந்து பேசுமாறு கூற, எங்களை ஏமாற்ற வேண்டாம் என்று கூறியபோது, அங்கு சென்றிருந்தவர் கூச்சலிட குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த, கபீர் ஹசீம் அவசரமாக பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.

கேள்விகேட்ட நபர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!