ஈரான் அதிபர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் வெளியீடு!
மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு தொடர்பான செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மோசமான வானிலை மற்றும் விமானத்தின் எடையை கட்டுப்படுத்த முடியாமல் விமானம் விபத்துக்குள்ளானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடந்த விபத்தில் ஈரான் அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானம் தாக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வெளிப்புற தொந்தரவுகள் ஏற்பட்டதா என்பது தெரியவரவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அஜர்பைஜான் எல்லைக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியபோது, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரண்டு பேர் அதிக அளவில் கொண்டு சென்றது தெரியவந்தது.
(Visited 10 times, 1 visits today)





