இலங்கை

இலங்கை: கிளப் வசந்த கொலை! 11 சந்தேகநபர்கள் மேலும் விளக்கமறியலில்

ஜூலை மாதம் அதுருகிரியவில் வர்த்தகர் கிளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் இன்று உயர் பாதுகாப்புடன் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கொலைச் சம்பவம் தொடர்பான எஞ்சிய விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

சந்தேகநபர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் கடுவெல நீதவான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 08 ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் கலையரங்கம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த போது கிளப் வசந்தா என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மற்றுமொரு நபர் இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content