இங்கிலாந்து மக்களுக்கு வானில் தெரியும் அரிய காட்சி!

பிரித்தானியாவில் பரபரப்பான விண்கல் மழையைத் தொடர்ந்து, skygazers அரோரா பொரியாலிஸ் என்றும் அழைக்கப்படும் விளக்குகள் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள மக்கள் வண்ணமயமான ஒளி காட்சியைக் காண முடியும் என்று இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
நியூகேஸில், பெல்ஃபாஸ்ட் மற்றும் ஐல் ஆஃப் மேன் போன்ற தெற்கே உள்ளவர்கள் இரவு நேரம் கழித்து வடக்கு நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த ஒளியை பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.
தெற்கே மிகத் தொலைவில் இருப்பவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் வண்ணமயமான ஒளியை பார்வையிட முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 83 times, 1 visits today)