இதுவே எனது கடைசி போட்டித் தொடர் – சனத் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய, தற்காலிக பயிற்சியாளராக இது தான் தனது கடைசி கிரிக்கெட் போட்டி தொடர் என தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்துக்கு விஜயம் செய்ய நாட்டிலிருந்து புறப்பட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இலங்கை வீரர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இந்த போட்டியை முடிந்தவரை சிறப்பாக நடத்தி முடிப்பேன் என ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)