இலங்கை செய்தி

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, பேலியகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், பியகம, மஹர, தொம்பே, ஜா எல, கட்டான, மினுவாங்கொடை , கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்குமென சபை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ள சபை, நீரை சேமித்து வைத்துப் பயன்படுத்துவதன் மூலம் உரிய காலப் பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ந்து கொள்ளுமாறு சபை குறிப்பிட்டுள்ளது.

(Visited 30 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை