இலங்கை செய்தி

இலங்கையில் அச்சுறுத்தலாக மாறியுள்ள வெளிநாட்டவர்கள் – 8 பேர் கைது

இலங்கையில் சீன பிரஜைகள் உட்பட 8 பேரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.

காலி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்குமிடத்தை சோதனையிட்ட போது இந்த வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் 24 மற்றும் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் 6 பேர் சீன பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற இருவரும் கசகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 9 கணனிகள், 73 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெருந்தொகை சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை நீர்கொழும்பு பகுதியில் தங்கியிருந்து இவ்வாறு இணைய குற்றங்களில் ஈடுபட்ட இந்தியர்கள் , உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 170க்கும் மேற்பட்டவர்கள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!