இலங்கை செய்தி

யாழில். திரைப்பட பாணியில் வங்கியில் மோசடி

பொலிஸார் , இளைஞனின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றம் செய்யப்பட்ட கணக்கு இலக்கத்திற்கு உரிய பெண்ணை கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரு ஆண்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்,

இளைஞனின் வங்கி கணக்கில் இருந்து ஒன்லைன் மூலமாக பணத்தினை பிறிதொரு கணக்குக்கு மாற்றுவதாயின் இளைஞனின் தொலைபேசிக்கு OTP நம்பர் வரும். அதனை தாம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக, கைது செய்யப்பட்டுள்ள பெண் , இளைஞனின் தொலைபேசி வலையமைப்புக்கு சென்று , குறித்த இளைஞன் தனது மருமகன் என கூறி, அவர் தற்போது தாய்லாந்தில் வசிப்பதாகவும் , அதனால் , இந்த இலக்கத்தை E சிம் ஆக மாற்றம் செய்து தருமாறு கோரியுள்ளார்.

நிறுவன ஊழியர்களுடன் , தாய்லாந்து தொலைபேசி இலக்கத்தில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு , தன்னை குறித்த இளைஞனாக அறிமுகம் செய்து உரையாடியுள்ளார்.

நிறுவன ஊழியர்கள் அடையாள அட்டை பிரதி கேட்ட போது , இளைஞனால் தமக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை பிரதியை மோசடியாக வழங்கி நிறுவனத்திடம் இருந்து E சிம் பெற்றுள்ளனர்.

E சிம்மை பெற்றவர்கள், இளைஞன் அவர்களிடம் வழங்கிய அடையாள அட்டை பிரதியின் ஊடாக இளைஞனின் அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி , இளைஞனின் வங்கி கணக்கினுள் ஊடுருவி பணத்தினை பிறிதொரு கணக்குக்கு மாற்றி உள்ளனர்.

வங்கி கணக்கினுள் செல்வதற்கு , மற்றும் பணத்தினை பிறிதொரு கணக்குக்கு மாற்றம் செய்வதற்கு, OTP நம்பர், இவர்கள் தம் வசம் வைத்திருந்த பாதிக்கப்பட்ட இளைஞனின் தொலைபேசி இலக்கத்திற்கு வந்தமையால் இவர்கள் அதனை மோசடியாக பணத்தினை மாற்றம் செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் இருவரையும் யாழ் .நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய போது, மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content