இலங்கை செய்தி

நண்பரின் இரண்டு வயது மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

02 வயது 05 மாத சிறுமியை பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அலோபோமுல்ல பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அருக்கொட அலோபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயும் தந்தையும் தமது நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக அலோபோமுல்ல பிரதேசத்தில் உள்ள இடமொன்றுக்கு சென்றுள்ளனர்.

சிறுமி உறங்கிக் கொண்டிருந்ததால், சிறுமியை காரில் விட்டுவிட்டு புகைப்படம் எடுத்துள்ளனர், அப்போது சந்தேகநபரின் நண்பர் சிறுமியிடம் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார் என்று காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை அலோபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!