பொழுதுபோக்கு

நடிகை ஷாலினிக்கு நடந்நது என்ன? படுத்த படுக்கை.. தீயாய் பரவும் புகைப்படம்

நடிகை ஷாலினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே மைனர் சர்ஜரி ஒன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.

நடிகை ஷாலினி இன்னமும் பூரணமாக குணமடையவில்லை என்று தகவல்கள் வலம் வருகின்றன. இந்நிலையில், படுக்கையில் படுத்துக் கிடக்கும் ஷாலினியுடன் மகன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் அஜித். படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அஜித் சென்னைக்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், அன்றைய தினத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த நாள் காலையிலேயே அஜித் சென்னைக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது மனைவியை பார்த்து ஆறுதல் சொன்னார். அந்த போட்டோ வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆனந்தக் கண்ணீர் விடச் செய்தது.

நடிகை ஷாலினிக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை குறித்த தகவல்கள் வெளியே கசியவில்லை. ஆனால், முக்கியமான அறுவை சிகிச்சை தான் என்று கூறுகின்றனர். தொடர்ந்து படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார் ஷாலினி என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், ஷாலினி வெளியிட்டுள்ள ஒரு போஸ்ட் மேலும், ரசிகர்களை உணர்ச்சி வசப்பட வைத்திருக்கிறது.

தனது மகன் ஆத்விக் தனது நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படுத்த படுக்கையாக ஷாலினி இருந்து வரும் நிலையில், மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் அவரை பத்திரமாக பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

நடிகை ஷாலினி விரைவில் பூரண குணமாகி குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் சீக்கிரமே போடுவார் என ஏகப்பட்ட அஜித் ரசிகர்களும் ஷாலினி ரசிகர்களும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content