இலங்கை செய்தி

இலங்கையில் அச்சுறுத்தலாக மாறும் ஒன்லைன் மோசடி – 167 பேர் இதுவரை கைது

இலங்கையில் ஒன்லைன் மூலம் மோசடி செய்த 30 சீன பிரஜைகள் உட்பட 167 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்கியுள்ளனர்.

இக்குழுவினர் BITCOIN ஊடாக இணையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தமை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்கியிருந்து ஒன்லைனில் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருமளவான வெளிநாட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன் தினமும் இவ்வாறான மோசடி தொடர்பாக 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன் பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இவ்வாறான மோசடி தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

வீடுகளை வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!