உலகம் செய்தி

ஏமன் கடலில் மூழ்கிய சிறிய படகு – 49 குடியேற்றவாசிகள் பரிதாபமாக மரணம்

200 மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஏமன் கடலில் மூழ்கியதில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் 140 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்களின்படி, இறந்தவர்களில் 6 குழந்தைகள் மற்றும் 31 பெண்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்தபோது படகில் 260 பேர் இருந்தனர்.

அவர்கள் எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த இன மற்றும் உள்நாட்டுப் போர் மோதல்களில் இருந்து தப்பியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவினர் 320 கிலோமீற்றர் தூரம் பாதயாத்திரையாக வந்து ஏடன் வளைகுடா ஊடாக படகு மூலம் ஏமன் செல்ல முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏமனில் இருந்து சவூதி அரேபியா மற்றும் பிற பிராந்திய அரபு நாடுகளுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குழுவொன்று நுழைய முயற்சித்துள்ளது.

படகு கடலில் மூழ்கியதையடுத்து கடலில் மிதந்த 71 பேரை கடலோர காவல்படையினர் காப்பாற்றியதாகவும் அவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!