இலங்கை செய்தி

ஒஸ்மான் ஜெராட்டை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஐ.எஸ்.ஐ.எஸ் சம்பவம் தொடர்பில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவர் பற்றியது.

அத்துடன், இணையத்தளத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களின் தலைவனாக கருதப்படும் ஒஸ்மான் ஜெராட் நேற்று (31) இரவு கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை ஊடாக அவர் கைது செய்யப்பட்டார்

See also  பாகிஸ்தான் அணித்தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கடந்த சனிக்கிழமை கோரியிருந்தனர்.

அவர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகநபர் கொழும்பு பகுதியில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்றிரவு அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் நேரடிக் கண்காணிப்பில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையிலேயே இது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இலங்கையில் வைத்து இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நால்வரும் இலங்கையில் நடத்தப்பட்ட பிரசங்கங்களிலும் பங்குபற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

See also  இலங்கை: 12 மில்லியன் பெறுமதியான யானை முத்துகளுடன் ஒருவர் கைது

சந்தேகநபர் இதனை திட்டமிட்டு ஆதரவளித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திருமணமாகாத சந்தேகநபர் இறைச்சி வியாபாரியாக பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content