வட அமெரிக்கா

கனடாவின் இரு வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; இருவர் பலி

கனடாவின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பிரம்டன் மற்றும் நோர்த் யோர்க் பகுதிகளில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரம்டனின் ருதர்போர்ட் மற்றும் பிரம்ஸ்டீலி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் 36 வயதான அமோர் அப்தல்லா என்பவர் உயிரிழந்துள்ளார்.

இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, நோர்த் யோர்க் பகுதியில் மதுபானசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

47 வயதான ரொபர்ட் கானின்ஸோ என்ற நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.நோர்த் யோர்க்கின் Avellino Social Club என்னும் இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.திட்டமிட்ட அடிப்படையில் இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!