மத்திய கிழக்கு

காசாவில் இருந்து 3 பணயக் கைதிகளின் உடல்களை மீட்ட இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7ம் திகதி காசாவின் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி பலரை கொன்றனர். மேலும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதற்கிடையே போர் நிறுத்தம் காரணமாக 130 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். எஞ்சியுள்ள பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையின் போது பிணைக்கைதிகள் மூவரின் உடல்களை மீட்டுள்ளனர்.

அவர்கள் இசை விழாவில் கொல்லப்பட்ட ஷானி லூக்(22) மற்றும் அமித் புஸ்கிலா (28), இட்சாக் கெலரென்டர் (56) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!