இலங்கை : ஹெகலியவின் விளக்கமறியல் நீட்டிப்பு!
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்பித்த ரிட் மனுவை பரீசிலிக்க நீதிமன்றம் திகதியை அறிவித்துள்ளது.
இந்த மனு இன்று (14) நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கெஹலியவின் ரிட் மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலிக்கவுள்ளதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருந்து கொள்வனவு தொடர்பான விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
(Visited 10 times, 1 visits today)





